திரிணாமுல் காங். நிர்வாகி மகன் பிறந்தநாள் விழாவில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - சிபிஐ அறிக்கை


திரிணாமுல் காங். நிர்வாகி மகன் பிறந்தநாள் விழாவில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - சிபிஐ அறிக்கை
x

உயிரிழந்த சிறுமியின் வீடு

திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி மகன் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் நந்தியா மாவட்டம் ஹன்ஷகில் கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் சமரிந்திர கயாலி. திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியான இவரின் மகன் பராஜ்கோபால் (21 வயது)

இதற்கிடையில், சமரிந்திர கயாலின் மகன் பராஜ்கோபால் கடந்த ஏப்ரல் 5-ம் தேதி இரவு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளான். அந்த பிறந்தநாள் விழாவில் அதேகிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி பங்கேற்றுள்ளார்.

பிறந்தநாள் விழாவில் பங்கேற்றிந்த சிறுமி பராஜ்கோபால் மற்றும் அவனது நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறப்படும் தங்கள் மகள் சம்பவம் நடைபெற்ற மறுநாள் உயிரிழந்துவிட்டதாகவும், இது பற்றி வெளியே கூறக்கூடாது என மிரட்டியதால் எங்கள் மகளின் உடலை தகனம் அன்றே செய்துவிட்டோம் என்று சிறுமியின் பெற்றோர் கூறினர்.

இது தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் மேலும் கூறுகையில், எங்கள் மகள் பிறந்தநாள் விழாவில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பிறந்தநாள் விழாவுக்கு பின் இரவு எங்கள் மகளை சிலர் வீட்டில் காரில் வந்து விட்டு சென்றனர். மிகுந்த உடல்வலியால் அவதிப்பட்டு வந்த எங்கள் மகள் அதிக ரத்தப்போக்கு காரணமாக மறுநாள் அதிகாலை வீட்டிலேயே உயிரிழந்துவிட்டார். இது பற்றி வெளியே கூறினார் வீட்டை எரிந்துவிடுவோம் என திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியான சமரிந்திர கயாலின் மற்றும் அவரது மகன் பராஜ்கோபால் எங்களை மிரட்டினார். ஆகையால், அந்த மிரட்டலுக்கு அஞ்சி, தைரியம் இல்லாததால் உயிரிழந்த எங்கள் மகளை தகனம் (எரியூட்டல்) செய்துவிட்டோம்' என அந்த சிறுமியின் பெற்றோர் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 10-ம் தேதி சிறுமியின் பெற்றோர் நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதற்கிடையில், 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் இந்த விவகாரம் மேற்குவங்காள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட்டு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி மகன் பராஜ்கோபால் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ விசாரணை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக போக்சோ சிறப்பு கோர்ட்டில் சிபிஐ நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில், பிறந்த நாள் விழா கொண்டாட்டத்திற்கு சென்ற சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது என சிபிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்த 3 பேர் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பின் அந்த சிறுமியை வீட்டில் விட்டுள்ளனர். அங்கு அவர் உயிரிழந்த நிலையில் சிறுமியின் உடலை அருகில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்துள்ளனர். இதனால், சிறுமியின் உடலை பரிசோதனை செய்வதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி வீட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நிலையில் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்டபோது அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 9 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். அந்த 9 பேருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என சிபிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியின் மகன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டிய நிலையில் சிபிஐ விசாரணையில் அந்த குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியந்துள்ளது.

வழக்கு தொடர்பாக விவரம்: - திரிணாமுல் காங். நிர்வாகி மகன் பிறந்தநாள் விழாவில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை? - மம்தா சர்ச்சை கருத்து


Next Story