வங்கி மேனேஜர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வங்கி காவலாளி


வங்கி மேனேஜர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வங்கி காவலாளி
x

வங்கி காவலாளி பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் படுகாயமடைந்த வங்கி மேனேஜர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் பத்ரொஹர்க் மாவட்டம் தர்ஷலாவில் ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியின் மேனேஜராக முகமது ஓவைசி பணியாற்றி வருகிறார். அதே வங்கியில் காவலாளியக தீபக் கெஷெத்ரி பணியாற்றி வருகிறார். காவலாளி தீபக் பாதுகாப்பு படையில் ஜம்மு-காஷ்மீர் ரைபல்ஸ் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார்.

இதனிடையே, நேற்று காலைக்கு தீபக் வேலைக்கு வரவில்லை. இதனால், தீபக்கிற்கு வங்கி மேனேஜர் முகமது வருகை பதிவேட்டில் ஆப்செட் என பதிவு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தீபக் பெட்ரோல் கேனுடன் வங்கிக்கு வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த வங்கி மேனேஜர் முகமது மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். காவலாளி தீபக் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் மேனேஜர் முகமது படுகாயமடைந்தார்.

அவரை ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 36 சதவிகித தீக்காயங்களுடன் முகமது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீபக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story