ஆம் ஆத்மிக்கு கட்சிக்கு விரைவில் தேசிய அங்கீகாரம்...அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்


ஆம் ஆத்மிக்கு கட்சிக்கு விரைவில் தேசிய அங்கீகாரம்...அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்
x

மேலும் ஒரு மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்டால் ஆம் ஆத்மி தேசிய கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை நெருங்க நினைக்கும் ஆம் ஆத்மி கட்சி, ஏற்கனவே டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. அந்த மாநிலங்களில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதேபோல் கோவாவிலும் கால்பதித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, சட்டமன்ற தேர்தலில் 2 எம்எல்ஏக்களை பெற்றது. இந்நிலையில், கோவாவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆம் ஆத்மியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனை பெருமை தரும் நிகழ்வாக பார்ப்பதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் தேசிய கட்சியாக மாறும். இதற்காக அனைத்து தொண்டர்களும் உழைக்க வேண்டும் என கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story