குனோ தேசிய பூங்காவில் மேலும் ஒரு சிறுத்தை உயிரிழப்பு..!


குனோ தேசிய பூங்காவில் மேலும் ஒரு சிறுத்தை உயிரிழப்பு..!
x
தினத்தந்தி 2 Aug 2023 11:21 AM GMT (Updated: 2 Aug 2023 11:56 AM GMT)

குனோ தேசிய பூங்காவில் சிறுத்தை ஒன்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது.

போபால்,

ஆப்பிரிக்க நாடான நமீபியாவிலிருந்து எட்டு சிறுத்தைகளும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகளும், இந்தியாவுக்கு கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டு, மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

இவை அனைத்தும் நன்கு பராமரிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் ஜுவாலா சிறுத்தை நான்கு குட்டிகளை ஈன்றதில், மூன்று குட்டிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அதேபோல் சாஷா எனும் பெண் சிறுத்தை, உதய் என்ற ஆண் சிறுத்தை, தக் ஷா என்ற பெண் சிறுத்தை, தேஜாஸ் என்ற ஆண் சிறுத்தை, சூரஜ் என்ற சிறுத்தை என கடந்த 4 மாதங்களில் 8 சிறுத்தைகள் இறந்தன.

இதனால் குனோ தேசிய பூங்கா பராமரிப்பு நிர்வாக அதிகாரிகள் மற்றும் வன அலுவலர்கள் உள்ளிட்ட சிலர் எவ்வித காரணமும் இன்றி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மேலும் ஒரு பெண் சிறுத்தை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது.. 20 சிறுத்தைகள் கொண்டு வரப்பட்ட நிலையில் இதுவரை 9 சிறுத்தைகள் உயிரிழந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story