காஷ்மீர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படையினர் அதிரடி


காஷ்மீர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படையினர் அதிரடி
x
தினத்தந்தி 17 Nov 2023 5:37 PM GMT (Updated: 17 Nov 2023 5:46 PM GMT)

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ரஜோரி போலீசாருடன் இணைந்து பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பஹ்ரொட் பகுதியில் தேடுதல் பணியின் போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

கொல்லப்பட்ட பயங்கரவாதியிடமிருந்து துப்பாக்கி, 2 கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. என்கவுண்டர் நடந்த இடத்தில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Next Story