அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை


அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
x

கோப்புப்படம்

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை நடைபெறுகிறது.

புதுடெல்லி,

ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த 11-ந்தேதி நடந்தது. முன்னதாக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்ததோடு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 13-ந்தேதி மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்க கோரி கடந்த வாரம் முறையிட்ட நிலையில், இவற்றை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நாளை (வியாழக்கிழமை) விசாரிக்கிறது.


Next Story