6 பேரை விடுதலை: சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது - காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்


6 பேரை விடுதலை: சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது - காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
x

6 பேரை விடுதலையில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியி மூத்த தலைவரும், பொதுச்செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற எஞ்சிய 6 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு விடுவிப்பதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி இதனை தெளிவாக விமர்சிக்கிறது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்ற நிலையை எடுக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த செயல்பாடு துரதிர்ஷ்டவசமானது. இந்தியாவின் ஆன்மாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு செயல்பட்டுவிட்டது. 6 பேர் விடுதலை முற்றிலும் தவறானது, துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று தெரிவித்துள்ளார்.


Next Story