சத்தீஸ்கரில் மரத்தில் மோதி தீப்பிடித்த கார்- 2 பேர் உடல் கருகி உயிரிழப்பு !
கிராமம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மரத்தின் மீது மோதி தீப்பிடித்தது.
ராய்ப்பூர்,
சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டத்தில் இருந்து கோட்மா கிராமத்திற்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் பெல்பஹ்ரா கிராமம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மரத்தின் மீது மோதி தீப்பிடித்தது.
இந்த விபத்தில் கார் டிரைவர் முகமது குவாஜா (வயது 34), பப்பு ராஜ்வாடே (31) ஆகியோர் காருக்குள் சிக்கி உடல் கருகி செத்தனர். மேலும் 4 பேர் உடல் கருகினர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story