பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி, 21 பேர் காயம்


பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி, 21 பேர் காயம்
x

உத்தரப் பிரதேசத்தில் பஸ் பள்ளத்தில் விழுந்ததில் ஒரு வயது சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

பிரோசாபாத்,

உத்தரப் பிரதேச மாநிலம் நாக்லா கங்கர் பகுதியில் லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் பஸ் பள்ளத்தில் விழுந்ததில் ஒரு வயது சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் காயமடைந்தனர்.

லூதியானாவில் இருந்து ரேபரேலி நோக்கிச் சென்ற பயணிகள் பஸ் நேற்று காலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட பேருந்தில் பயணம் செய்த 6 பேர் பலியாகினர். மேலும் 21 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

உயிரிழந்தவர்களில் ரீனா (வயது 22), அவரது ஒரு வயது மகன் அயன்ஷ், பதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 25), கவுசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த சந்த் லால் (வயது 70) ஆகிய 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த மற்ற இருவரின் அடையாளம் கண்டறியப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story