சாலையோர கிணற்றுக்குள் கவிழ்ந்த கார் - 6 பேர் பலி


சாலையோர கிணற்றுக்குள் கவிழ்ந்த கார் - 6 பேர் பலி
x

அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கிணற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசரிபாக் மாவட்டம் ரொமி கிராமத்தில் உள்ள சாலையில் இன்று மதியம் 2 மணியளவில் கார் விபத்துக்குள்ளானது. 9 பேருடன் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கிணற்றுக்குள் கவிழ்ந்து விழுந்தது.

இந்த கோர விபத்தில் காரில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story