இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா
x

நாடு முழுவதும் இதுவரை 4.44 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 51 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 98 ஆயிரத்து 298 ஆக உயர்ந்தது.

நேற்று காலை நிலவரப்படி 480 பேர் கொரோனா மீட்பு சிகிச்சையில் இருந்தனர். இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 65 ஆயிரத்து 783 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 32 ஆயிரத்து 31 ஆக நீடிக்கிறது.


Next Story