மேலும் 51 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை


மேலும் 51 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை
x

24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 35 பேர் குணமடைந்தனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று முன்தினம் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4 கோடியே 49 லட்சத்து 96 ஆயிரத்து 599 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 35 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 63 ஆயிரத்து 206 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 16 அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி, 1,468 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். கொரோனாவுக்கு நேற்று முன்தினம் ஒருவர் உயிரிழந்த நிைலயில், நேற்று உயிர்ப்பலி இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 925 ஆக நீடிக்கிறது.


Related Tags :
Next Story