காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x

காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் புல்வாமா மாவட்டம் திராப்கம் பகுதியில் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். அங்கு நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். நேற்று காலையில் மீண்டும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மேலும் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று போலீஸ் ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்தார்.

ஒரு பயங்கரவாதியின் பெயர் ஜூனைத் ஷீர்கோஜ்ரி என்றும், கடந்த மாதம் ரியாஸ் அகமது என்ற போலீஸ்காரர் கொலையில் தொடர்புடையவர் என்றும் தெரிய வந்தது. மற்ற பயங்கரவாதிகளின் பெயர்கள் பாசில் நாசர் பட், இர்பான் அகமது மாலிக் ஆகும்.

இதற்கிடையே ஸ்ரீநகரில் உள்ள கிரிஸ்போல் பல்போரா என்ற இடத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் மேலும் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன்மூலம் 24 மணி நேரத்தில் நடந்த என்கவுண்ட்டரில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீஸ் ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


Next Story