புதிதாக 48 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை


புதிதாக 48 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை
x

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 6 குறைந்தது.

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று முன்தினம் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 94 ஆயிரத்து 713 ஆக அதிகரித்தது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 54 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 61 ஆயிரத்து 393 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 6 குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 1,407 பேர் சிகிச்சையில் இருந்தனர்.

தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் உயிர்ப்பலி இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 913 ஆக நீடிக்கிறது.


Next Story