லடாக்கில் 2-வது நாளாக மிதமான நிலநடுக்கம்


லடாக்கில் 2-வது நாளாக மிதமான நிலநடுக்கம்
x

லடாக் யூனியன் பிரதேசத்தில் இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

லடாக் யூனியன் பிரதேசத்தில் இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.0 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட செய்தியில், லடாக்கின் லேவில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.36 மணியளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல், இன்று காலை 9.30 மணியளவில் கார்கிலில் 4.3 ரிக்டர் அளபிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story