இந்தியாவில் புதிதாக 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


இந்தியாவில் புதிதாக 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 59 பேர் குணமடைந்தனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் 60 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று அது சற்று குறைந்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதை தொடர்ந்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 95 ஆயிரத்து 434 ஆக அதிகரித்தது.

நேற்று கொரோனாவில் இருந்து 59 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 61 ஆயிரத்து 67 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 17 குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 1,452 பேர் சிகிச்சையில் இருந்தனர். தொடர்ந்து 11-வது நாளாக நேற்றும் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை. இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 915 ஆக நீடிக்கிறது.


Next Story