காஷ்மீர் எல்லையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ஊடுருவல் முயற்சி முறியடிப்பு


காஷ்மீர் எல்லையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை  ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
x

காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தின் உரி செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் ராணுவமும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தின் உரி செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் ராணுவமும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மடியான் நானக் பகுதியில், எல்லைக்கு அப்பாலில் இருந்து 3 பயங்கரவாதிகள் காஷ்மீரில் ஊடுருவ முயன்றனர். உடனடியாக அவர்களை சுற்றி வளைத்த படையினர், சரணடையுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து முன்னேறியதுடன், படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடும் நடத்தினர். உடனடியாக படையினரும் திருப்பி தாக்குதல் நடத்தினர்.

இதில் 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் மூலம் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story