பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி நடிகர் சூர்யா ரசிகர்கள் 2 பேர் பலி


பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி நடிகர் சூர்யா ரசிகர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 23 July 2023 10:21 AM GMT (Updated: 23 July 2023 10:26 AM GMT)

பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி நடிகர் சூர்யா ரசிகர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

அமராவதி,

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நரசாராவ்பேட்டை மண்டலத்தில் உள்ள யாக்களவாரி பாளையம் கிராமத்தில் இன்று அதிகாலை அவருடைய ரசிகர்கள் சூர்யாவின் பேனர்களை கட்டி கொண்டிருந்தனர்.

அப்போது பேனர் இரும்பு கம்பி என்பதால் அருகிலிருந்த மின்சார வயர் மீது எதிர்பாராத விதமாக உரசி மின்சாரம் பாய்ந்தது. இதில் வெங்கடேஷ் (வயது 19 ), சாய் (20) ஆகிய ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story