மாணவிகளிடம் சில்மிஷம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது


மாணவிகளிடம் சில்மிஷம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 27 April 2022 3:30 PM GMT (Updated: 27 April 2022 3:30 PM GMT)

நாகர்கோவிலில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
மாணவிகளிடம் சில்மிஷம்
நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பறக்கையை சேர்ந்த நித்ய லட்சுமணவேல் (வயது 59) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களின் பெற்றோரிடம் கூறினார்கள். அதைத்தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
கைது
இதுபற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சமூக நலத்துறையினர் புகார் செய்தனர். அதன்பேரில் நித்ய லட்சுமணவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
மேலும் பாலியல் புகாரில் சிக்கியுள்ள தலைமை ஆசிரியர் நித்ய லட்சுமணவேல் கைது செய்யப்பட்டதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறினார். 

Next Story