தர்மபுரியில் 2 அடுக்குபஸ் நிறுத்தம் அமைக்கும் பணி


தர்மபுரியில் 2 அடுக்குபஸ் நிறுத்தம் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 22 April 2022 4:30 PM GMT (Updated: 22 April 2022 4:30 PM GMT)

தமிழகத்தில் முதல் முறையாக தர்மபுரியில் 2 அடுக்கு பஸ் நிறுத்தம் அமைக்கும் பணியை செந்தில்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.

தர்மபுரி:-
தர்மபுரி அரசு கலைக்கல்லூரி அருகில் மின்வாரிய அலுவலகம் முன்பு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.68 லட்சத்தில் 2 அடுக்கு பஸ் நிறுத்தம் அமைக்கப்படுகிறது. இதில் முதல் மாடியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய அறைகள், அடிப்படை வசதிகள் மற்றும் முற்றிலும் சோலார் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் வசதிகள் செய்யப்பட உள்ளன. தமிழகத்திலேயே முதன்முறையாக தர்மபுரியில்தான் இந்த  2 அடுக்கு பஸ் நிறுத்தம் அமைக்கப்பட இருக்கிறது.
இதற்கான பூமி பூஜையை டாக்டர் செந்தில்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், 2 அடுக்கு பஸ் நிறுத்தம் அமைக்கும் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதில் என்னென்ன வசதிகள் உள்ளது என்பது திறக்கப்பட்ட உடன் தெரியவரும். இதேபோன்று அரூர், மேட்டூர் பகுதியிலும் 2 அடுக்கு பஸ் நிறுத்தம் அமைக்கப்பட உள்ளதுஎன்றார்.
நிகழ்ச்சியில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர் சுதா ரமேஷ், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் செல்லதுரை, மகேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story