மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கியாஸ் சிலிண்டர் வினியோக தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கியாஸ் சிலிண்டர் வினியோக தொழிலாளி பலி
x
தினத்தந்தி 19 April 2022 9:18 PM GMT (Updated: 19 April 2022 9:18 PM GMT)

உசிலம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் கியாஸ் சிலிண்டர் வினியோக தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.

உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் கியாஸ் சிலிண்டர் வினியோக தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.
விபத்தில் பலி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பெரியவாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கர் (வயது 43).இவர் தனியார் நிறுவனத்தில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணி செய்து வந்தார். இவர் சிலிண்டர்களை வினியோகம் செய்வதற்காக மதுரை ரோட்டில் உள்ள வாலாந்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், சொக்கரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
இதில் சொக்கர், மற்ெறாரு மோட்டார் சைக்கிளில் வந்த அஜித்குமார் (23) மற்றும் சாலையோரம் நின்றிருந்த வாலாந்தூரைச் சேர்ந்த போஸ் மகன் ஹரிஸ் (13) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 3 பேரையும் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சொக்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 
2 பேர் படுகாயம்
மேலும் படுகாயமடைந்த அஜித்குமார் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுவன் ஹரிஸ் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வாலாந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story