வங்கிக்கடனை செலுத்த முடியாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை


வங்கிக்கடனை செலுத்த முடியாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 4 July 2021 6:49 PM GMT (Updated: 4 July 2021 6:49 PM GMT)

வங்கிக்கடனை செலுத்த முடியாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

கோவை

வங்கிக்கடனை செலுத்த முடியாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

வங்கிக்கடன்

விருதுநகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது30). இவருடைய மனைவி ராணி (28). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. பிரபாகரன் தனது சொந்த ஊரில் கணினி மையம் நடத்தி வந்தார். இதற்காக அவர், ஒரு வங்கியில் ரூ.8 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது.

ஆனால் போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்தார். 

மேலும் கொரோனா ஊரடங்கு காரண மாக கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி, மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு கோவை வந்தார்.

விஷம் குடித்து தற்கொலை

அவர், குடும்பத்துடன் சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் வாடகை வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராணி குழந்தையை அழைத்துக்கொண்டு சொந்த ஊரான விருதுநகர் சென்று விட்டார். 

தனியாக இருந்த பிரபாகரன் போதிய வருமானம் இன்றி தவித்து வந்தார். இதன் காரணமாக அவர் வங்கிக்கடனையும் செலுத்த முடியாததால் அவதிப்பட்டு வந்தார். 

இதனால் விரக்தி அடைந்த பிரபாகரன் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன் பரிதாபமாக இறந்தார்.


இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story