விக்கிரமசிங்கபுரம் அருகே பரபரப்பு ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தை
விக்கிரமசிங்கபுரம் அருகே ஊருக்குள் புகுந்து 4 ஆடுகளை சிறுத்தை கடித்துக் கொன்றது.
விக்கிரமசிங்கபுரம்,
விக்கிரமசிங்கபுரம் அருகே ஊருக்குள் புகுந்து 4 ஆடுகளை சிறுத்தை கடித்துக் கொன்றது.
சிறுத்தை அட்டகாசம்
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ளது வேம்பையாபுரம் கிராமம். இந்த கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர். இங்கு மிளா, காட்டுப்பன்றி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களில் அடிக்கடி நாசம் செய்து வருகின்றன. அதேபோல் சிறுத்தை அவ்வப்போது ஊருக்குள் வந்து, விவசாயிகள் வளர்க்கும் ஆடுகளை கடித்து கொல்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் வேம்பையாபுரம் காலனி பகுதியில் சிறுத்தை அட்டகாசம் மீண்டும் தொடர்ந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் (வயது 70) என்பவர், தனது வீட்டில் 4 ஆடுகள் வளர்த்து வந்தார்.
4 ஆடுகளை கடித்துக் கொன்றது
நேற்று முன்தினம் அதிகாலை வீட்டின் கொட்டகைக்கு சென்று பார்த்தபோது, அங்கு கட்டியிருந்த 4 ஆடுகளும் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்தது. இதனை பார்த்து வள்ளியம்மாள் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பாபநாசம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து பார்வையிட்டனர். இதில் 4 ஆடுகளையும் சிறுத்தை கடித்துக் கொன்றிருப்பது தெரியவந்தது. ஊருக்குள் புகுந்து 4 ஆடுகளை சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story