நாங்குநேரியில் பலத்த மழை: அ.தி.மு.க. தேர்தல் அலுவலக பந்தல் சரிந்தது


நாங்குநேரியில் பலத்த மழை: அ.தி.மு.க. தேர்தல் அலுவலக பந்தல் சரிந்தது
x
தினத்தந்தி 19 Oct 2019 10:00 PM GMT (Updated: 19 Oct 2019 8:28 PM GMT)

நாங்குநேரி பகுதியில் பெய்த பலத்த மழையால், அ.தி.மு.க. தலைமை தேர்தல் அலுவலக பந்தல் சரிந்தது.

நாங்குநேரி, 

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. சார்பில் நாங்குநேரி 4 வழிச்சாலை டோல்கேட் அருகே கட்சி தேர்தல் தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டது. இதற்காக அங்கிருந்த சாலையோர ஓட்டல் கட்டிடத்தை தேர்தல் அலுவலகமாக தயார்படுத்தி இருந்தனர். மேலும் அதன் முன்பு பந்தல் அமைத்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று நாங்குநேரி பகுதியில் மழை பெய்தது. தேர்தல் அலுவலக பகுதியில் சற்று பலத்த மழை பெய்தது.

இந்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த தேர்தல் அலுவலக பந்தல் ஒரு பக்கமாக சரிந்தது. இதைக்கண்ட தொண்டர்கள் பந்தலுக்குள் இருந்து வெளியே ஓடி வந்தனர். மேலும் அந்த நேரத்தில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் வெவ்வேறு பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்துக்கு சென்றிருந்ததால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Next Story