அந்தியூர் சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.2 லட்சத்துக்கு விற்பனை


அந்தியூர் சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.2 லட்சத்துக்கு விற்பனை
x
தினத்தந்தி 30 Jun 2019 10:00 PM GMT (Updated: 30 Jun 2019 3:20 PM GMT)

அந்தியூர் சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.2 லட்சத்துக்கு ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

அந்தியூர்,

அந்தியூர் கால்நடை சந்தையில் நேற்று மாடு விற்பனை நடந்தது.

இந்த சந்தைக்கு ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், அந்தியூர், பர்கூர், தேவர்மலை, தாளவாடி, குட்டையூர், சத்தியமங்கலம், டி.என்.பாளையம், சேலம், ஓமலூர், பண்ணவாடி, எடப்பாடி, நாமக்கல், அன்னூர், கர்நாடக மாநிலம் வேளாம்பட்டி, மாதேஸ்வரன் மலை உள்பட பல பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

நேற்று நடந்த சந்தையில் பர்கூர் இன செம்மை நிற பசு மாடு ஒன்று ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. சிந்து இன மாடு ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், ஜெர்சி இன மாடு ஒன்று ரூ.15 ஆயிரம் முதல் ரூ.38 ஆயிரம் வரையும் விற்கப்பட்டது.

நாட்டு காளை மாடு ஜோடி ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரையும், காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையும் விற்பனை செய்யப்பட்டது. நாட்டு பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.65 ஆயிரம் வரையும், எருமை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையும், கன்று குட்டிகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது.

ஈரோடு, கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து மாடுகளை விலைபேசி பிடித்து சென்றனர்.


Next Story