ஐபிஎல் : ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி : சென்னை அணி 169 ரன்கள் குவிப்பு
சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது .
மும்பை,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் - சென்னை அணிகள் மோதுகின்றன.
குஜராத் அணியில் ஹார்திக் பாண்டியா விளையாடாததால் இந்த போட்டியில் குஜராத் அணியின் கேப்டனாக ராஷித் கான் செயல்படுகிறார் .
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது .தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் ,ராபின் உத்தப்பா களமிறங்கினர் .
கடந்த போட்டியில் ஹீரோவாக ஜொலித்த உத்தப்பா இந்த போட்டியில் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த மொயீன் அலி 1 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்
மறுபுறம் ருதுராஜ் அதிரடியாக விளையாடினார் ,அவருடன் சேர்ந்து அம்பத்தி ராயுடு நிதானமாக விளையாடினார் .சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார் .
மறுபுறம் நிதானமாக ஆடி கொண்டிருந்த ராயுடு பந்துகளை பவுண்டரி,சிக்சருக்கு விரட்டினார்,அவர் 31 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இதனையடுத்து சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்துகளில் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த சிவம் துபே ,ஜடேஜா கடைசி நேரத்தில்அதிரடி காட்டினர் கடைசி ஓவரில் ஜடேஜா 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார் .
இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது .
Related Tags :
Next Story