அடுத்த படத்தில் இணையும் கமல் - சூர்யா : மகிழ்ச்சியில் ரசிகர்கள்


அடுத்த படத்தில் இணையும் கமல் - சூர்யா : மகிழ்ச்சியில் ரசிகர்கள்
x

விக்ரம் திரைப்படம் வெற்றியடைவதற்கு காரணமாக இருந்த படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார் .

சென்னை,

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் .3 நிமிடம் மட்டும் படத்தில் வந்தாலும் அவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது

இந்நிலையில், விக்ரம் திரைப்படம் வெற்றியடைவதற்கு காரணமாக இருந்த படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார் .

அந்த வீடியோவில் சூர்யா குறித்து பாராட்டி பேசிய கமல் கூறியதாவது ;

கடைசி மூன்று நிமிடம் வந்து திரையரங்குகளை அதிர வைத்த என் தம்பி சூர்யா அன்பிற்காக மட்டுமே அதைச் செய்தார். அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாக காட்டிவிடலாம் என்று இருக்கிறேன்.

இதனால் அடுத்த படத்தில் கமல் -சூர்யா இணைவது உறுதியாகி இருக்கிறது .இந்த தகவல் கமல் -சூர்யா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story