வருமானம் இல்லாமல் தவித்து வரும் நடிகர்...! டாஸ்மாக்கில் காலி பாட்டில்களை எடுத்து விற்று பிழைக்கும் அவலம்


வருமானம் இல்லாமல் தவித்து வரும் நடிகர்...! டாஸ்மாக்கில் காலி பாட்டில்களை எடுத்து விற்று பிழைக்கும் அவலம்
x

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி.

சென்னை,

உடலில் தீக்குச்சியை உரசி நெருப்பை வரவைக்கும் சினிமா துணை நடிகர், பொருளாதார சூழல் காரணமாக டாஸ்மாக் கடைகளில் பாட்டில் எடுத்துவிற்று பிழைப்பு நடத்தி வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி. சுப்ரமணியபுரம், திண்டுக்கல் சாரதி, நம்ம ஊர் ராசா உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ள இவர், குடும்பத்தை நடத்த போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருகிறார்.

இதனிடையே, உடலில் தீக்குச்சியை உரசி நெருப்பை வரவைத்த அவர், அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தார். அவருக்கு பெரிய நடிகர்கள் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story