காஷ்மீரில் முதல்முறையாக சர்வதேச மாரத்தான் போட்டி; 2 ஆயிரம் பேர் பங்கேற்பு

காஷ்மீரில் முதல்முறையாக சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற்றது.

Update: 2024-10-20 05:26 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக சர்வதேச மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. மாரத்தான் போட்டியை முதல்-மந்திரி உமர் அப்துல்லா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல தடகள வீரர்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர்.

மாரத்தான் போட்டி 2 பிரிவுகளாக நடைபெற்றது. 21 கிலோமீட்டர் தூரம், 42 கிலோமீட்டர் தூரம் என 2 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.

இந்த மாரத்தான் போட்டி துவக்க நிகழ்ச்சியில் காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா உடன் பிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்