புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் - ஜெய்ப்பூர் அணிகள் இன்று மோதல்

புரோ கபடி தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது

Update: 2024-10-22 03:35 GMT

ஐதராபாத்,

12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது

இன்றைய ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி), உ.பி.யோத்தாஸ் - பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

ஜெய்ப்பூர் அணி புள்ளி பட்டியலில் 4வது இடத்திலும் , தெலுங்கு டைட்டன்ஸ் 7வது இடத்திலும் உள்ளன . உ.பி.யோத்தாஸ் புள்ளி பட்டியலில் 5வது இடத்திலும், பெங்களூரு புல்ஸ் 9வது இடத்திலும் உள்ளன

Tags:    

மேலும் செய்திகள்