புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் இன்று மோதல்

புரோ கபடி லீக் போட்டி நேற்று தொடங்கியது

Update: 2024-10-19 00:57 GMT

ஐதராபாத்,

11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் , இன்று நடைபெறும் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ் (இரவு 8 மணி), புனேரி பால்டன் - அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்