ஜெய்ஸ்வால், கில் அதிரடி... 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Update: 2024-07-13 13:57 GMT

image courtesy: twitter/@BCCI

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 46 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக கலீல் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் - ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். இதில் கில் நிதானமாக விளையாட ஜெய்ஸ்வால் ஆரம்பம் முதலே அதிரடியில் வெளுத்து வாங்கினார். 29 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

சுப்மன் கில்லும் தனது பங்குக்கு அரைசதம் அடிக்க இந்தியா வெறும் 15.2 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கில் 58 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 93 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்