சர்வதேச டி20 கிரிக்கெட்: விராட், ரோகித் வரிசையில் ஜடேஜா..ஓய்வு அறிவிப்பு

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜடேஜா அறிவித்துள்ளார்.

Update: 2024-06-30 11:29 GMT

புதுடெல்லி,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது.

கோப்பையை வென்ற நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'நன்றி நிறைந்த இதயத்துடன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடை பெறுகிறேன். ஒரு வலிமையான குதிரை துள்ளிக் குதிப்பதைபோல, எப்போதும் என் நாட்டிற்காக என்னால் முடிந்ததை செய்து வருகிறேன். ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். டி20 உலகக்கோப்பையில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு நினைவாகிவிட்டது. இது எனது உச்சம். என்னுடைய நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், உங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கும் நன்றி.ஜெய்ஹிந்த். ரவீந்திரசிங் ஜடேஜா" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்