4-வது டி20 போட்டி:ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

ஜிம்பாப்வே - இந்தியா இடையிலான 4-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

Update: 2024-07-13 10:36 GMT

image courtesy: twitter/@BCCI

ஹராரே,

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த 2 ஆட்டங்களில் இந்திய அணி முறையே 100 ரன், 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்