த.வெ.க. மாநாடு: சாலையின் நடுவே சென்டர் மீடியனில் ஆபத்தான நிலையில் படுத்து உறங்கிய ரசிகர்கள்

மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-10-27 02:46 GMT

சென்னை,

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தம் கட்சி போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதற்கு முன்னோட்டமாக, கட்சியின் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடத்தப்படுகிறது. முதல் மாநாடு என்பதாலும், தமிழக மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதாலும், மாநாட்டின் ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன. கட்சியின் நோக்கங்கள், கொள்கை திட்டங்கள் குறித்து, தொண்டர்கள் மத்தியில் இன்று விஜய் உரையாற்ற இருக்கிறார். கட்சி தொடங்கிய பின் அவரது முதல் உரை என்பதால், தமிழக அரசியல் கட்சியினர் அனைவரும் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதலே தொண்டர்கள் மாநாட்டிற்கு வர தொடங்கி விட்டனர் .

இந்த நிலையில் , மாநாட்டிற்கு வருகை தந்த ரசிகர்கள் சிலர் சாலையின் நடுவே சென்டர் மீடியனில் ஆபத்தான நிலையில் படுத்து உறங்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டின் முகப்பு பகுதிக்கு எதிரே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே சென்டர் மீடியனில் ரசிகர்கள் ஆபத்தை உணராமல் படுத்து உறங்கியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்