செய்திகள் சில வரிகளில்......
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.
சென்னை,
* சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
* அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி டிரம்ப் - பைடன் நாளை நேருக்கு நேர் விவாதம் செய்ய உள்ளனர்.
* ராஜஸ்தானில் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
* மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குரல் வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
* ரஷியாவில் பயங்கரவாத தாக்குதலில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.தேவாலயங்களை தொடர்ந்து போலீஸ் நிலையம் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
* நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்டு செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
* கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு 61 ஆக உயர்ந்துள்ளது.
* கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: சிலி அணியை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி பெற்றது.
* வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
* மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை சபாநாயகர் அங்கீகரித்தார்.