சிக்கிமில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

சிக்கிமில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2024-08-09 02:48 GMT

காங்டாக், 

சிக்கிமில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. சிக்கிமின் சோராங் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.  

கடந்த 6-ம் தேதி மணிப்பூர் மற்றும் மேகாலயாவில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் முறையே  3.1 மற்றும் 2.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கங்களால் லேசான அதிர்வு உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்படாவிட்டாலும்  மக்கள் பீதி அடைந்தனர். வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து ஏற்படும் இந்த நிலநடுக்கங்கள் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்