ஆர்.எஸ்.எஸ். தலைவரை சந்தித்த உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சந்தித்தார்.

Update: 2024-10-22 22:27 GMT

லக்னோ,

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று சந்தித்தார். மதுராவின் அருகே பார்ஹம் பகுதியில் நடந்த இந்த சந்திப்பின்போது தேசிய பிரச்சினைகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் முன்னதாக உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை மோகன் பகவத் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்