ஜம்மு காஷ்மீர்: பக்தர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 10 பேர் பலி

பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2024-06-09 15:43 GMT

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள பிரபல கோவிலான சிவகோடி குகைக் கோயிலுக்குச் செல்வதற்காக பஸ்சில் பக்தர்கள் சென்றுகொண்டிருந்தனர். பஸ் ரியாசி மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதியில் வந்துகொண்டிருந்தபோது திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களை உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் அதிகாரி ரியாசி மோஹிதா சர்மா கூறுகையில், "ஷிவ் கோரியில் இருந்து கத்ரா நோக்கி சென்று கொண்டிருந்தவர்கள் பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூட்டினால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 33 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது."

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்