வயநாட்டில் அமைச்சர் வீணா ஜார்ஜ்:... ... வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 296 - ஆக உயர்வு- 3 வது நாளாக தொடரும் மீட்பு பணி

வயநாட்டில் அமைச்சர் வீணா ஜார்ஜ்: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்

வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு முகாம்களில் இருக்கும் மக்களை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேரில் சந்தித்தார். முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்த அவர், அவர்களின் வேதனையில் பங்கெடுத்து கொள்வதாக தெரிவித்தார். அவரிடம் இருந்ததை எல்லாம் இழந்து விட்டதாக அங்கிருந்த மக்கள் வேதனை தெரிவித்தனர். இருந்தபோதும் ஆற்றுப்படுத்த முடியாதவர்களை ஆரத்தழுவி அமைச்சர் ஆறுதல் கூறினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வீணா ஜார்ஜ் , “கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வயநாட்டில் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்” என்று கூறினார். மேலும் உள்துறை மந்திரி அமித்ஷாவின் அறிக்கை துரதிருஷ்டவசமானது என்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் அனைத்து தரவுகளும் உள்ளன என்றும் அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். 

Update: 2024-08-01 06:02 GMT

Linked news