கிழக்கு உக்ரைனில் பெரும்பகுதியை கைப்பற்றிய ரஷியா... ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி தவிப்பு..!

கிழக்கு உக்ரைனின் சிவிரோடொனெட்ஸ்க் நகரத்தின் பெரும்பகுதியை ரஷியப் படைகள் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கித் தவித்து வருவதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா.செய்தித் தொடர்பாளர் கூறுகையில், டான்பாஸை கைப்பற்ற சிவிரோடொனெட்ஸ்கில் தொடர் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள், அனைத்து பாலங்களையும் தகர்த்து அந்நகரை சுற்றி வளைத்துள்ளதாகவும், அங்குள்ள அசோட் தொழிற்சாலையில் தஞ்சமடைந்துள்ள 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Update: 2022-06-17 10:30 GMT

Linked news