வயநாடு நிலச்சரிவு - ஏர்டெல் இலவச சேவை

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 3 நாட்களுக்கு இலவச சேவை வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் இலவச மொபைல் டேட்டா மற்றும் பிற சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ஒருநாளைக்கு 1ஜிபி இலவச டேட்டா, ஒருநாளைக்கு 100 எஸ்.எம்.எஸ். இலவசம். மேலும், ஏர்டெல் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, வயநாடு வாடிக்கையாளர்களுக்கான பில் செலுத்தும் காலக்கெடு கூடுதலாக 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தாவிட்டாலும், அடுத்த ஒரு மாதத்திற்கு சேவைகளை பயன்படுத்தலாம். 2 மாதங்களுக்கான கட்டணத்தையும் அடுத்த மாதம் செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-08-01 14:14 GMT

Linked news