விம்பிள்டன் டென்னிஸ்: 4-வது சுற்றில் நுழைந்தார் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 14-வது முறையாக 4-வது சுற்றுக்குள் ஜோகோவிச் நுழைந்தார்.

Update: 2022-07-01 21:46 GMT





லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-0, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் கெக்மனோவிச்சை வீழ்த்தி 14-வது முறையாக 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில், தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள மரியா சக்காரி (கிரீஸ்) 3-6, 5-7 என்ற நேர் செட்டில் 103-ம் நிலை வீராங்கனை தட்ஜனா மரியாவிடம் (ஜெர்மனி) அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் பிரெஞ்சு ஓபன் சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 3-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் கேமிலியா பெகுவை (ருமேனியா) விரட்டியடித்து 4-வது சுற்றை எட்டினார். ஹீதர் வாட்சன் (இங்கிலாந்து), ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா), எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்) உள்ளிட்டோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்