சாலை விபத்தில் செவிலியர் படுகாயம்

சாலை விபத்தில் செவிலியர் படுகாயம்

Update: 2023-05-09 18:30 GMT

பண்ருட்டி.

பண்ருட்டி திருவதிகை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி லட்சுமி (வயது 54). இவர் மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணி புரிந்து வருகிறார். சம்பவத்தன்று லட்சுமி தனது கணவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் மேல்பட்டாம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார். பழைய கடலூர் சாலையில் சென்றபோது, மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்து பயணம் செய்த லட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே பாலகிருஷ்ணன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்