பாரா ஒலிம்பிக்; இறுதிப்போட்டியில் தோல்வி கண்டார் அவனி லேகரா

மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

Update: 2024-09-03 15:32 GMT

கோப்புப்படம்

பாரீஸ்,

மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் தகுதிச்சுற்றில் இந்தியாவின் அவனி லேகரா 1159 புள்ளிகள் பெற்று 7-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதையடுத்து பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் அவனி லேகரா 420.6 புள்ளிகள் பெற்று 5வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்