ஆசிய ஆக்கி இறுதிப் போட்டியில் பங்கேற்கிறார் மத்திய மந்திரி அனுராக் தாகூர்

இறுதிப்போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Update: 2023-08-11 13:13 GMT

சென்னை,

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில்லீக் முடிவில் இந்தியா முதல் இடத்தையும், மலேசியா 2-வது இடத்தையும் பிடித்தன. தென் கொரியா 3-வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

இன்று அரையிறுபோட்டிகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை  மந்திரி அனுராக் தாகூர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுராக் தாகூர் இறுதிப்போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிக்க உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்