பெண்கள் டி20 உலகக் கோப்பை : இந்தியா போராடி தோல்வி..! ஆஸ்திரேலிய அணி இறுதிபோட்டிக்கு முன்னேற்றம்

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணி 10 ரன்கள் எடுத்தது

Update: 2023-02-23 16:15 GMT

கேப்டவுன்,

8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. இந்த நிலையில் கேப்டவுனில் இன்று நடைபெற்ற அரைஇறுதியில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோதின .இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.

அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 4விக்கெட் இழப்பிற்கு172 ரன்கள் குவித்தது. அந்த அணியில் பெத் மூனி சிறப்பாக ஆடி 54 ரன்கள் எடுத்தார். மெக் லானிங் 46ரன்கள் , ஆஷ்லே கார்ட்னர்31 ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் ஷிகா பாண்டே விக்கெட் , ராதா யாதவ் ,தீப்தி சர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 173ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

தொடக்கத்தில் ஸ்மிருதி மந்தானா 9 ரன்களும், ஷபாலி வர்மா 2 , யாஸ்டிகா 4 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் , ஹர்மன்பிரீத் கவுர் இணைந்து அதிரடியாக ஆடினர். இருவரும் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர்.

அதிரடியாக ஆடிய ஜெமிமா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்நது ஆடிய ஹர்மன்பிரீத் கவுர் அரைசதம் அடித்த நிலையில்52 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணி 10ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதனால் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்