பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா

பெண்களுக்கான ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

Update: 2023-01-23 00:53 GMT

போட்செப்ஸ்ட்ரூம்,

பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் சுற்று முடிவில் 12 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

2-வது சுற்றில் 12 அணிகள் சூப்பர் சிக்ஸ் என்ற அடிப்படையில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. சூப்பர் சிக்சில் தனது இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை நேற்று எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 59 ரன்கள் மட்டுமே எடுத்தது.

விஷ்மி குணரத்னே அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் பர்ஷவி சோப்ரா 4 விக்கெட்டும், மன்னட் காஷ்யப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 60 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடம் களமிறங்கிய இந்தியா 7.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சவுமியா திவாரி 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்