இந்தியாவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து இலங்கை முன்னணி வீரர் விலகல்

இந்தியா - இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

Update: 2024-08-04 09:15 GMT

கொழும்பு,

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டுக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய நிலையில் தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகள் மோதிய பரபரப்பான முதலாவது ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து இலங்கை அணியின் முன்னணி வீரரான ஹசரங்கா காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஜெப்ரி வாண்டர்சே அணியில் இடம்பிடித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்