புச்சிபாபு கிரிக்கெட்: பெங்கால் அணி 193 ரன்னில் சுருண்டது

புச்சிபாபு நினைவு அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி நெல்லை, கோவை, சேலம், நத்தம் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது.

Update: 2023-08-27 20:52 GMT

நெல்லை,

12 அணிகள் இடையிலான புச்சிபாபு நினைவு அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி நெல்லை, கோவை, சேலம், நத்தம் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் 3-வது சுற்று நேற்று தொடங்கியது. தமிழ்நாடு கிரிக்கெட் தலைவர் லெவன்- சத்தீஷ்கார் (ஏ பிரிவு) இடையிலான ஆட்டம் கோவையில் நடக்கிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த சத்தீஷ்கார் முதல் இன்னிங்சில் 85.3 ஓவர்களில் 270 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷசாங் சிங் 56 ரன் எடுத்தார். தமிழகம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அஜித் ராம் 7 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக தலைவர் லெவன் அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்துள்ளது.

நெல்லையில் தொடங்கிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவனுக்கு எதிரான (டி பிரிவு) ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்கால் 57.2 ஓவர்களில் 193 ரன்னில் சுருண்டது. அடுத்து களம் இறங்கிய தமிழக அணி 32 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்துள்ளது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்